புதன், 24 நவம்பர், 2010

வீதி வழிகாட்டி

>>A9 வீதியூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வதாயின் கிட்டத்தட்ட 410 km தூரத்தைக் கடந்து யாழ் நகரை அடைய முடியும். தற்போதைய வீதி அமைப்பின்படி கொழும்பில் இருந்து யாழ் நகரை சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தேவைப்படுகிறது.

>>கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாஞ்சேனை ஊடாக நீர்கொழும்பு வீதியை அடைந்து A3 பாதையூடாக களனிபாலம், வத்தளை, மாபொல, கந்தான, ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க, வென்னப்புவ, கட்டுநெரிய, மாரவில, மகாவெவ, சிலாபம், ஆராச்சிகட்டிவ ஆகிய இடங்களைக் கடந்து புத்தளம் நகரை அடைய வேண்டும்.

>>புத்தளம் A10 வீதியூடாக கருவெலகஸ்வெவ, நொச்சியாகம, அனுராதபுரம் ஊடாக யாழ் சந்தியை சென்றடந்து A20 வீதியூடாக சென்று கண்டி வீதியில் மதவாச்சியை சென்றடைய வேண்டும்.

>>பின்னர் A9 வீதியூடாக வவுனியா, புளியங்குளம், மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, பளை, கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கைதடி, நாவற்குழி, மாம்பழசந்தி, கச்சேரியடி ஆகிய இடங்களைக் கடந்து யாழ் நகரை சென்றடைய முடியும்.

யாழ்ப்பாண வரைபடம்

yarlmap

இலங்கை நாட்டின் வட மாகாணத்தின் முடிவு எல்லையில் யாழ் மாவட்டம் அமைந்துள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து கிட்டத்தட்ட 410 கிலோ மீற்றர் தொலைவில் யாழ்ப்பாணம் உள்ளது. 7 தீவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1025 சதுர கிலோ மீற்றர்களாகும். யாழ் மாவட்டம் தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

யாழ் அரச நிர்வாக கட்டமைப்பு
உதவி அரச அதிபர் பிரிவு
பிரதான நகரம்
கிராம
சேவையாளர்கள்
பரப்பளவு (சதுர கிலோமீற்றர்)

நெடுந்தீவு
தீவு வடக்கு
தீவு தெற்கு
யாழ்ப்பாணம்
காரைநகர்
நல்லூர்
தென்மராட்சி
வடமராட்சி கிழக்கு
வடமராட்சி வடக்கு
வடமராட்சி தென்மேற்கு
வலிகாமம் கிழக்கு
வலிகாமம் வடக்கு
வலிகாமம் தெற்கு
வலிகாமம் தென்மேற்கு
வலிகாமம் மேற்கு

நெடுந்தீவு
ஊர்காவற்துறை
வேலணை
யாழ்ப்பாணம்
காரைநகர்
நல்லூர்
சாவகச்சேரி
மருதங்கேணி
பருத்தித்துறை
கரவெட்டி
கோப்பாய்
தெல்லிப்பளை
உடுவில்
சண்டிலிப்பாய்
சங்கானை

6
15
30
28
9
40
60
18
35
35
32
45
30
28
25

49.5
43.8
98.4
21.7
21.7
27.4
229.4
118.5
54.2
65.9
102.2
61.1
32.3
50.2
49.30


யாழ் குடாநாடு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லைகளாக யாழ்ப்பாண கடனீரேரியும் கிளிநொச்சி மாவட்டமும் அமைந்துள்ளன. தரைவழியாக ஆனையிறவு கடநீரேரியை கடந்து யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்ஆனையிறவு கடநீரேரி இலங்கையின் மிக முக்கியமான உப்பளங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசம் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அங்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலாலி விமானநிலையமும் காங்கேசந்துறை துறைமுகமும் அங்குள்ளன. இவற்றின் மூலம் யாழ் மாவட்டத்திற்கான தொடர்புகள் மேலும் இலகுபடுத்தப்படுகின்றன. ஒரு காலங்களில் யாழ்ப்பாணத்தின் இளவட்டங்கள் காலையில் படகு மூலம் தென் இந்தியாவிற்கு சென்று அங்கு வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை பார்த்துவிட்டு மாலையில் திரும்புவது வழமையாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வயதில் பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்களின் இளவயது நினைவுகள் எமக்குத் தெரியவரும்.

யாழ் மாவட்டம் ஒரு உலர் வலயப் பிரதேசமாகும். இங்கு பனை மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் திடல்களாக பரந்து விரிந்துள்ளன. பழங்காலங்களில் பெண்களுக்கு சீதனம் வழங்கும்போது பனந்திடல்களை வழங்கினார்கள். அதனால் முழுக்குடும்பமுமே பசி, பட்டினி இன்றி வாழ்ந்ததுடன் பனந்திடல்களை வழங்குவதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள்.

ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மூலம் இங்கு மழை வீழ்ச்சி கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் இப்பருவப்பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல்லை பெரும்போகமாக பயிரிட்டு அறுவடை செய்து வருடம் முழுவதும் வளத்தோடு வாழ்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு 1811.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைப் கிடைக்கப்பெற்றுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவான வெப்பநிலை இங்கு காணப்படும். இம்மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 21.40 தொடக்கம் 32.40 சென்ரிகிரேட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இங்குள்ளவர்கள் சிறுபோககாலங்களில் பயறு, உழுந்து, சணல், கௌபி, தினை, குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களை பயிரிட்டு தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் புகையிலை, முந்திரி, வெங்காயம், மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வெற்றிலை, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் நல்ல கிராக்கி காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான தொழில்களாக விவசாயமும் மீன் பிடியும் காணப்படுகிறது. விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ் மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தமது உள்ளூர் சந்தைத் தேவையையும் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் தென்னிலங்கைக்கும் மீன்கள் மற்றும் கருவாடுகளை அனுப்பும் திறமை அவர்களிடம் உண்டு.

இவ்வாறு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழும் யாழ்ப்பாணம் பற்றிய பல்சுவை விபரங்களைத் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

வியாழன், 4 நவம்பர், 2010

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்).

1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2.அமேசன் தென் அமெரிக்கா 4000.

3.சாங்சியாங் சீனா 3964.

4.ஹுவாங்கோ சீனா 3395.

5.ஒப் ரஷ்யா 3362.

6.ஆமூர் ரஷ்யா 2744.

7.லீனா ரஷ்யா 2374.

8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9.மீகாங் இந்தோ-சீனா 2600.

10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11.எனிசேய் ரஷ்யா 2543.

12.பரானா தென் அமெரிக்கா 2485.

13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14.மிசெளரி ரஷ்யா 2315.

15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.

உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி)

1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5.தவளகிரி நேபாளம் 26,810.

6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11.குக் நியூசிலாந்து 12,340.

தெரிந்து கொள்ளுங்கள்_3

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.


30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

தெரிந்து கொள்ளுங்கள்_2

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை.இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.



தெரிந்து கொள்ளுங்கள்_1

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.